அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 56வது ஆண்டு பேரவையை ஞாயிறன்று (மே 29) எம்ஜிஆர் நகரில் தொடங்கியது. முன்னதாக கே.கே.நகர் பணிமனையிலிருந்து சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்ற பேரணியில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சம்மேளன நிர்வாகிகள் ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, துணைத்தலைவர் எஸ்.பக்தவச்சலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.