tamilnadu

அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக  கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

சென்னை, செப்.1- அரசு கலை, அறிவியல் மற்றும்  கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கவுரவ விரிவுரையா ளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும்  கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம்  கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன.  ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி யினை பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் புதிதாக 15  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களை தொடங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். மாண வர்களின் தேவைக்கேற்ப 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவு களில் உருவாக்கப்பட்டன. நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை,  மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க கவுரவ விரி வுரையாளர்களை தற்காலிகமாக பணிய மர்த்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஜூலை 21, 2025 அன்று கௌரவ விரிவு ரையாளர்கள் தற்காலிக பணியமர்த்து தலுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியானவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 28 வரை அந்தந்த  மண்டலங்களில் நேர்காணல் நடைபெற்றது.  நேர்காணல் முடிவில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப்  பட்டியல் tngasa.org என்ற இணைய தளத்தில் திங்களன்று (செப்.1) வெளி யிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கவுரவ விரிவுரை யாளர்கள் தங்களது பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் வழியாக, தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் விவ ரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். செப்டம்பர் 8-க்குள் உரிய கல்லூரி களில் தற்காலிக கௌரவ விரிவுரையா ளர்கள் பணியில் இணைய வேண்டும்.