tamilnadu

இலங்கை சிறையிலிருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை

சென்னை,ஜன.25- தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் கண்டனம் எழுந்தது. இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை  நிபந்தனையுடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் ஜனவரி 25 அன்று உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி படகுகள் ஏலம் விடுவது குறித்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

;