tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு

சென்னை, மே 12- போக்குவரத்து தொழிலாளர் களுக்கு 5விழுக்காடு ஊதிய உயர்வு அளிக்க சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங் களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படா மல் தள்ளிப்போனது. 2 ஆண்டு களாக  போக்குவரத்து தொழிற்சங்கத் தினர் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வருடம் தி.மு.க. ஆட்சி  பொறுப்பேற்ற பிறகு ஊதிய உயர்வு குறித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேருந்து  தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,  ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படி, மருத்துவ சலுகை வழங்கு தல், ஓய்வூதிய நிலுவை வழங்கு தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில்  14வது ஊதிய  ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை  குரோம்பேட்டை மாநகர போக்கு வரத்து கழக பயிற்சி மையத்தில் வியாழனன்று (மே 12)  நடை பெற்றது.  இதில் சிஐடியு தரப்பில்  அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார், தொ.மு.ச தரப்பில் சண்முகம் எம்.பி.,  நடராஜன், ஏஐ டியுசி தரப்பில் ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி தரப்பில் விஷ்ணுபிரசாத் எம்.பி.,  உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

அமைச்சர் பேட்டி 

பேச்சுவார்த்தைக்கு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவ சங்கர், தொழிலாளர்களுக்கான பேட்டா, வாரிசுதாரர்களுக்கு வேலை, பணி உயர்வு, புதிய பணி  நியமனம் உள்ளிட்ட தொழிற்சங்கங் கள் விடுத்த பல்வேறு கோரிக்கை கள் ஏற்கப்பட்டதாக கூறினார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிறைவேற்றப்படும் ஊதிய ஒப்பந்தம்  கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைக்கால நிவாரணமாக மாதம்தோறும் 1000 வழங்கப்பட்டு வருகின்றது. பணியில் இறந்தவர்களின்  வாரிசுகள் 10 ஆண்டுக்கு மேலாக வேலை பெற காத்திருக்கின்றனர். வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் அவர்களுக்கு பணி நியமன ஆணை யை  வழங்குகிறார். கொரோனா பணிக்கால பேட்டா 300 ரூபாய்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மகளிர் இலவச பேருந்து ஓட்டு நர், நடத்துநருக்கு பயணியர் எண்ணி க்கைக்கு ஏற்ப பேட்டா வழங்கும் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. நீண்ட  காலமாக பதவி உயர்வு இல்லாமல் இருப்போர் தொடர்பாக கணக் கெடுப்பு நடத்தி தீர்வு காணப்படும்; ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு புதிய ஒப்பந்தம் கோரப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு தொடர்பாக, 1.9.19 முதல் 31.12.21 வரை 2 சதவீத மும், 1.1. 22 முதல்  இதுநாள் வரை 3  சதவீதம் என உயர்த்தி போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு 5  சத வீதம் ஊதிய உயர்வு வழங்க  உறுதி யளித்துள்ளோம். பெரும்பாலான  கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. பிற கோரிக்கைகள் முதல்வர் கவனத்தில் கொண்டு செல்லப்படும் என்றார் அமைச்சர். 

பெண்கள் பயணம் அதிகரிப்பு

பெண்களின்  பேருந்து பயணம் 40லிருந்து 61 விழுக்காடாக  அதிகரித்துள்ளது. எனவே பயணியர் நிறுத்தங்க ளில் பலர் காத்திருக்கின்றனர். ஆனால் வெள்ளைப் பலகை பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கூறினார். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய விகித பிரச்ச னையை தீர்க்க குழு அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து துறையில் புதிய பணி நிய மனம் தொடர்பாக நிதித்துறைக்கு கோப்பு கள் அனுப்பப்பட்டு உள்ளன. விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

அ.சவுந்தரராசன் பேட்டி

பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், “கோரிக்கைகளை அமைச்சர் முழுமையாக கேட்டார். 8 விழுக்காடு ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந் தத்தை சீர்படுத்த கோரிக்கை விடுத்தோம். அமைச்சர் அவகாசம் கேட்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தை சீர் செய்த பிறகு ஊதிய உயர்வு தொடர்பாக இறுதி முடுவு எடுப்போம்” என்றார். 

மகளிர் பேருந்து தொழிலாளர்களுக்கான பேட்டாவை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கையை கொள்கை அளவில் அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். மற்ற பேருந்துகளுக்கான பேட்டா அதிமுக ஆட்சி யில் 80:20 விகிதத்தில் போடப்பட்டதையும் சீர் செய்ய வலியுறுத்தினோம். ஒட்டுமொத்த மாக ஒப்பந்தம் குறித்த எங்களது முடிவை, எங்கள் குழுவினருடன் ஆலோசித்து அறி விப்போம். அதிமுக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட ஊதிய ஒப்பந்தம் ஜூனியர்க ளுக்கு சற்று அதிகம் கொடுத்து, சீனியர் களை ஏமாற்றும் வகையில் அமைந்தது. போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. பறப்பதைப் பார்த்து இருப்பதை இழக்க விரும்பவில்லை. அரசியலுக்காக இது குறித்து பேச முடி யாது” என்றும் சவுந்தரராசன் கூறினார்