25 மினி ஸ்டேடியங்கள் சென்னை: நடப்பாண்டில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 25 மினி ஸ்டேடியங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெளி யிடப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
ட்ரோன்கள் பறக்கத் தடை
அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள ஒன்றிய அரசின் தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு உள் துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு ட்ரோன் களை பறக்க விட மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது
. ஏட்டிக்கு போட்டி!
சென்னை: மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்புக்கு ஆதரவு திரட்டும் வகையில் கை யெழுத்து இயக்கத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை வீம்புக்காக தொடங்கினார்.
தமிழ்நாட்டிற்கு தண்டனை
சென்னை: “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைவதை ஏற்க முடியாது. தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது” என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
சிவாஜி மகன் கோரிக்கை
சென்னை: ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடனுக்காக வட்டியுடன் சேர்த்து ரூ.9,39,05,543-ஐ வசூலிப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் புதனன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் சார்பில் மனு அளிக்கப்பட்டது. வழக்கை விசா ரித்த நீதிபதி, கடன் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணும்படி அறி வுரை வழங்கி, வழக்கை ஒத்தி வைத்தார்.
தண்ணீர் பந்தல்
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்க ளில் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிய நிலை யில், அதிலிருந்து மக்களை காக்கும் வகையில், திமுக சார்பில் அனைத்து மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிரா மங்கள் என அனைத்து இடங்களிலும் - மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகள் - சாலை மற்றும் தெருக்கள் ஓரமாக, போக்குவரத்து மற்றும் பொதுமக்க ளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்கள் தாகத்தை தீர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
. பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தை
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளா கத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டட வேலைகள் நடைபெறும் பகுதியில் புதனன்று சிறுத்தை நடமாடியதாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், வியாழனன்று பல்கலைக்கழக மைதானத்தில் நடக்கவிருந்த விளையாட்டுப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணியிடம்
சென்னை: ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பு படித்த வர்களை, சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங் களுக்கான விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன.