தூத்துக்குடி, மே 22- தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி காவல்துறை நடத்திய துப் பாக்கிச் சூட்டிலும், கொலை வெறி தாக்குதலிலும் பாதி கப்பட்டு உயிரிழந்த 15 தியா கிகளுக்கு நான்காவது ஆண்டு நினைவு தினம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மாசிலாமணிபுரத் தில் உள்ள சிபிஎம் கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, புவிராஜ், பூ மயில், ஒன்றியச் செயலா ளர் சங்கரன், புறநகர செயலா ளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, மாரி யப்பன், எம்.எஸ்.முத்து, ஸ்ரீநாத், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்தி, மாவட்டச் செய லாளர் மாரிச்செல்வம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முத்தையாபுரம் பஜாரில் புறநகரச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற் றது. நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, புறநகர் குழு உறுப்பினர்கள் பூராடன், வெள்ளைச்சாமி, சுப்பையா, வன்னியராஜா, சரஸ்வதி, கிருஷ்ணபாண்டி, பாஸ்க ரன், மாதர் சங்க புறநகரத் தலைவர் ஹையர்நிஸா உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அதேபோல் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் பி.ராமமூர்த்தி நினைவு அலுவலகத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற் றது. இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங் கத்தினர் கலந்து கொண்ட னர்.