tamilnadu

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரின் பொறுப்புகள் பறிப்பு

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரின் பொறுப்புகள் பறிப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரின் கட்சிப் பொறுப்பு களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும்  இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த செங்கோட்டையன், இது தொடர்பான நடவடிக்கையை பத்து நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனி சாமிக்கு கெடு விதித்தார். செங்கோட்டையன் கெடு விதித்த  மறுநாளே, அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனி சாமி பறித்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொ டர்பாக கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத் தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு  வருகிறார். இந்த நிலையில், செங்கோட்டையன் ஆதரவா ளர்கள் மேலும் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். ஈரோடு புறநகர்  மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் நிர்வாகி களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.