tamilnadu

img

விஜய் பிரச்சாரத்தில் பறி போன 40 உயிர்கள் : கதறித் துடிக்கும் கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி

விஜய் பிரச்சாரத்தில் பறி போன 40 உயிர்கள் : கதறித் துடிக்கும் கரூர்

சென்னை, செப். 28 - கரூரில் விஜய் பிரச்சாரத்தில் 40 உயிர்களை இழந்து கதறித் துடிக்கும் மிகப்பெரும் துயர நிலை கண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேதனையும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 27.09.2025 அன்று கரூரில் மேற்கொண்ட  பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற் பட்டு 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 40 அப்பாவி மக்கள் பலி யான துயரச் சம்பவம் அதிர்ச்சி யும், வேதனையும் அளிப்பதுடன் இந்தியாவையே உலுக்கியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் உள்ளன.  இந்த நெரிசலில் சிக்கி பலி யானவர்களின் குடும்பத்தின ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  படு காயமுற்று சிகிச்சை பெற்று வரு பவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டு மெனவும் வலியுறுத்துகிறோம். இந்தியாவில் இதுவரை அரசியல் பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் இந்த அளவு பெரும் எண்ணிக்கையில் உயிர்ப்பலி நிகழ்ந்ததில்லை. இனியும் இதுபோன்று நடக்கா மல் இருக்க அனைத்து வகை யிலும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. விஜய்க்கு கடும் கண்டனம் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அக்கட்சியினர் அணுகிய போது, பல்வேறு நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது. ஆனால், அந்த விதிமுறைகள் எதையும் அக்கட்சியினர் பின் பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கரூருக்கு நண்பகல் 12 மணியளவில் விஜய் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணி அள விலேயே அவர் கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளார். நீண்ட நேரமாக குடிநீர், உணவு கூட இல்லாமல் மக்கள் காத்திருந்த நிலையில் விஜய் அங்கு வந்தவுடன் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.   பெண் கள், குழந்தைகள் உட்பட பலர் மயங்கி விழுந்துள்ளனர். விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் பலி ஏற்பட்ட நிலை யில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப் பட்ட மக்களுக்கு எந்த முதலுத வியும் செய்யவில்லை. மாறாக, விஜய் உடனடியாக சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளார். அவ ரது கட்சி நிர்வாகிகளும், மருத்துவமனைக்குக் கூட செல்ல வில்லை என்பது வன்மையான  கண்டனத்திற்குரியது. பெரும் கூட்டம் கூடும் நிலை யில், அவற்றை முறைப்படுத்து வதற்கான எந்த ஒரு முயற்சி யும் அக்கட்சி நிர்வாகிகள் எடுக்க வில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண் டும்.  நீதிமன்றம் பிறப்பித்த விதி முறைகள் கறாராக பின்பற்றப்படு கிறதா என்பதை காவல்துறையும் உறுதி செய்திருக்க வேண்டும். முதல்வரின் துரித நடவடிக்கை இச்சம்பவம் குறித்து அறிந்த வுடன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நெரிசலில் சிக்கி காயமடைந்த வர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட தோடு அமைச்சர்களையும் அங்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். அவரும் இர வோடு இரவாக கரூர் சென்று உயி ரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறு தல் தெரிவித்ததோடு, காய மடைந்து சிகிச்சை பெறுவோர் களையும் சந்தித்தது சரியான நட வடிக்கையாகும். தமிழக அரசின் சார்பில் உடனடியாக உயிரிழந் தோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் நிவா ரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக விசாரித்திடுக! இந்த துயர சம்பவம் குறித்து  விசாரிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள் ளது.  இந்த ஆணையம் குறிப் பிட்ட காலத்திற்குள் விரைவாக விசாரித்து, நடந்த கோர நிகழ்வு கள் குறித்து மட்டுமின்றி எதிர் காலத்தில் இத்தகைய நிகழ்வு கள் எதுவும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை மற்றும் மாவட்ட தலைவர்கள் உடனடியாக கரூருக்கு சென்று உயிரிழந்தோரின் குடும்பங் களைச் சந்தித்து ஆறுதல் தெரி வித்ததோடு, சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.