tamilnadu

img

நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிப்பு

சென்னை, ஜன.19-  தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட் டோர் நாய்க்கடியால் பாதிக்கப்படு கின்றனர். அதில், ரேபிஸ் உள்ளிட்ட தொற்றால் 30-க்கும் மேற்பட்டோர் இறக் கின்றனர். 2024 ஆம் ஆண்டில் நாய்க்கடி யால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 79,705 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 37,011 பேரும், தஞ்சாவூரில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும், புதுக்கோட்டையில் 21,490  பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீட்டு நாய்கள் கடித்தாலும் அலட்சியம் கூடாது  இதுதொடர்பாக தமிழக பொது சுகா தாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “நாய்க்கடிகள் அதிகரித்து வந்தாலும், அதற்கான தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலை யில் உள்ளன. குறைந்தது 20 குப்பிகள் அளவுக்கு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி கள் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப் படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கடித்தாலும் அலட்சியம் காட்டாமல், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.  திடக் கழிவுகளை முறையாக அகற்றாத தால் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. உணவு பற்றாக்குறை போன்றவற்றாலும் நாய்கள் பாதிக்கப்பட்டு, சாலை யில் செல்வோரை கடிக்க  முற்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது” என்று தெரிவித்தார்.