tamilnadu

img

காய்ந்து கருகும் குறுவை பயிர்; ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்குக: விவசாயிகள் சங்கம்

சென்னை, ஆக.9- காவிரி டெல்டா மாவட்டங்க ளில் தண்ணீரின்றி காய்ந்து கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்திருக்கும் அறிக்கை யில், நடப்பாண்டு காவிரி டெல்டா  மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்திற்கு அணை திறக்கப்பட்ட போது அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து தற்போது 58 அடிக்கும் கீழ் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது. பாசனத் திற்காக தண்ணீர் நாகை, திரு வாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,  கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. “குறுவை சாகுபடி செய்த நேரடி  விதைப்பு, நடவு செய்த நெற்பயிர் தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகி றது. குறிப்பாக, நாகை மாவட்டத் தில் தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம்  நடைபெற்ற குறுவை சாகுபடி பயிர் முற்றிலும் காய்ந்து கருகி  விட்டது. அதே போல்திருவாரூர்  மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. இனிமேல் தண்ணீர் சென்றா லும் பயிர்களை பாதுகாக்க முடி யாது. எனவே, மாநில அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்  அதிகாரிகள் மூலம் உரிய முறை யில் ஆய்வு செய்ய வேண்டும். முற்றிலும் காய்ந்து கருகிய நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 நிவாரணத்தை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும். மேலும், எஞ்சியிருக்கக் கூடிய  குறுவை பயிர்களை பாதுகாப்பதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி யில் ஜூன், ஜூலை மாதம்  கர்நாடகம்  வழங்க வேண்டிய தண்ணீரில் பாக்கி  உள்ள தண்ணீரையும், ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை யும் முழுமையாக கர்நாடக அரசு  திறந்துவிட காவிரி நதிநீர் ஆணை யம் உடனடியாக உத்தரவிட வேண்டும். மாநில அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீரை பெறுவதற்கு அனைத்து விதமான சட்டநடவடிக்கை களையும் உடன் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.