திருவனந்தபுரம், ஜுலை 9- கேரளத்தில் காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவனந்த புரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா தவிர அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை (கன மழை) அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை வரையிலும், கர் நாடக கடற்கரையில் செவ்வாய்கிழமை வரையிலும் மீன்பிடிக்க செல்ல வேண் டாம். 3.4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பவும், சூறைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
53 சதவிகிதம் கூடுதல் மழை
கேரளத்தில் வெள்ளிக்கிழமை வரை இயல்பை விட 53 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. பத்தனம்திட்டா தவிர மற்ற 13 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டம் அதிக மழையைப் பெற்றுள்ளது (6.6 மிமீ). இயல்பை விட இது 139 சதவிகிதம் அதிகம். கண்ணூரில் 80 சதவிகிதமும், வயநாட்டில் 47 சதவிகிதமும் கூடுதல் மழை பெய்துள்ளது. முகாம்களுக்கு 3071 கட்டிடங்கள் பருவமழையை எதிர்கொள்ள கேர ளம் முழுவதுமாக தயார் நிலையில் உள்ள தாக வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடு களை மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சி யர்களின் ஆன்லைன் கூட்டம் நடந்தது. மறுகுடியேற்ற முகாம்களுக்காக 3071 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள் ளன. இதில் நான்கு லட்சத்துக்கும் அதிக மான மக்கள் தங்க முடியும். தற்போது ஐந்து முகாம்களில் 69 பேர் உள்ளனர். மாவட்டம் மற்றும் தாலுகா அடிப்படையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக் கப்பட்டுள்ளது. அவசர பணிக்காக கிராம அலுவலர்களுக்கு முன்பணமாக ரூ. 25,000 வழங்கப்படும். மரம் வெட்டுவது தொடர்பான விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆறுகளின் நீரோட்டத்தை சீராக்கும் பணி நடந்து வரு கிறது. மாவட்டம் மற்றும் தாலுகா அள வில் விரைவு நடவடிக்கை படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தோட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப் படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.