tamilnadu

img

கரூரில் சிபிஎம் வளர்ச்சி நிதி கே.பாலகிருஷ்ணனிடம் ரூ.3.25 லட்சம் அளிப்பு

கரூர், ஏப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் வட்டக் குழு சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் கரூர் மாவட்டம் தரகம்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல் வரவேற்றார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கட்சி  வளர்ச்சி நிதியாக ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார்.  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, பி.ராஜூ, கே.சக்திவேல், இரா.முத்துச்செல்வன் ஆகியோர் பேசி னர். வட்டக்குழு உறுப்பினர் பி.வேல் முருகன் நன்றி கூறினார்.  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதுகை பூபாலன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.        (ந.நி.)