இராஜபாளையம், மார்ச் 19- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்-தென்காசி சாலையில் கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். இராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை யில் அரசு மருத்துவமனை அருகே இராஜபாளையம் தனியார் கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு கார் மற்றொரு வாகனத்தை தாண்டி வேகமாக வந்து கல்லூரி பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த திருச்சி திருப்பரை துரையைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துக்குமார் (46), இவரது மனைவி ராஜேஸ்வரி (37), மற்றும் பெரியக்காள் (62) என்ற மூதாட்டி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இராஜ பாளையம் தீயணைப்பு துறையினர் காரின் பாகங்களை உடைத்து சடலங்களை மீட்டனர். மேலும் கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநர் ராமசாமிக்கு (62) கால்கள் முறிந்து இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டது. இவர் இராஜ பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இராஜபாளையம் தெற்கு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.