tamilnadu

img

சீனா விண்வெளி நிலையத்தில் 2ஆவது வகுப்பு

“வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும். காற்றில் ஏறி பயணம் செய்ய பாதை அங்கே இருக்கும்” என்பது பிரபல தமிழ்த் திரைப்படப் பாடல். அந்தக் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும் காலம் கனிந்து வரும் வாய்ப்பு கைகூடி வருகிறது போலுள்ளது. நிலவில் பள்ளிக்கூடம் நடக்க நாளாகலாம். விண்வெளியில் பள்ளிக்கூடம் நடக்கிறது. அந்த அறிவியல் ஆச்சரியத்தை சீனா செய்து கொண்டிருக்கிறது.

சீன விண்வெளி ஆசிரியர்களான ச்சாய் ச்சிகாங், வாங் யாபிங், யே குவாங்ஃபூ ஆகியோர் மார்ச் 23ஆம் நாள் தியன்கொங் வகுப்பறையின் 2ஆவது பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்த இந்த வகுப்பில் நுண்ணிய ஈர்ப்பு விசையில் பனி பரிசோதனை திரவப்பாலம், நீர் எண்ணெய் பிரிதல், பொருள் எறிதல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அவற்றிலுள்ள அறிவியல் கோட்பாடுகளையும் விளக்கிக் கூறினர். சில விணவெளி அறிவியல் கருவிகள் பற்றியும், விண்வெளி நிலையத்திலுள்ள வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றியும் அவர்கள் அறிமுகம் செய்தனர். நடப்பு வகுப்பின் முக்கிய தரை வகுப்பறை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும், அதன் 2 கிளை வகுப்பறைகள் திபெத்தின் வாசாவிலும் சின்ஜியாங்கின் உருமுச்சியிலும் அமைக்கப்பட்டன.