tamilnadu

img

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் மாயம்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் மாயம்

இரண்டாவது நாளாக அதிகாரிகள் விசாரணை திருநெல்வேலி, ஜூன் 7- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப் பேட்டையில் உள்ள தாமிரபரணி அரசு போக்குவரத்துக் கழக பணி மனையில் 25 ஆயிரம்  லிட்டர் டீசல்  மாயமானது. தொடர்ந்து இரண்டா வது நாளாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேரில் விசா ரணை நடத்தினர். டீசல் சேமித்து வைக்கும் டேங்க்  பகுதியில் எவ்வாறு டீசல் குறைந்து உள்ளது என்பது தொடர்பாக தங்கள் ஆய்வை மேற்கொண்டனர், டீசல்  மாயமானது தொடர்பாக  கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில்  மேலும் யாருக்கேனும் தொடர்பு  இருக்கிறதா? என்பது தொடர்பாக வும், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டனர். இந்த  விசாரணைக்கு பிறகு மேலும் சில  அதிகாரிகள் பணியிடை நீக்கம்  செய்யப்படலாம் என கூறப்படுகிறது.