புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்களை ஒப்படைக்கும் நிகழ்வு சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், 186 ஓர் ஆண்டு, 45 அரையாண்டு என மொத்தம் 230 சந்தாக்களுக்கான தொகை ரூ. 4 லட்சத்து 18 ஆயிரத்து 150-ஐ, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடம், இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், ராம்ஜி, ராமமூர்த்தி, அன்புமணி, சரவணன், தமீம் ஆகியோர் வழங்கினர். மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா ஆகியோர் உடனிருந்தனர்.