புதுக்கோட்டை, ஜன.29- 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் நீட் தேர்வில் வெற்றிபெற்று புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 23 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து சாதனை படைத்துள்ள னர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடை பெற்று வருகிறது. இதற்கு பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரி வித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலி யுறுத்தி போதிய அழுத்தம் கொடுக்க வில்லை. அதே நேரத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத் துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவித்தது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதோடு, இந்த விழுக் காட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அனைத்துப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தி லிருந்து 541 மாணவ, மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஒரே பள்ளியிலிருந்து 7 மாணவிகள் தேர்வு
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 20 எம்பிபிஎஸ், 3 பிடிஎஸ் என 23 பேர் வெள்ளிக்கிழமை நடை பெற்ற கலந்தாய்வில் பல்வேறு கல்லூரி களில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர். ஆலங்குடி வட்டாரப் பகுதியில் இருந்து மட்டும் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக கீரமங்கலம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்த 7 மாணவிகள் (6 எம்பிபிஎஸ, 1 பிடிஎஸ்), அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள் ளிட்டோர் பாராட்டினர்.