திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று 21 ஆவது பட்டமளிப்பு விழா
திருச்சிராப்பள்ளி, ஜூலை 25- திருச்சி துவாக்குடியில் உள்ள ஒன்றிய அரசின்கீழ் செயல்பட்டு வரும் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 21 ஆவது பட்டமளிப்பு விழா ஜூலை 26 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேசியத் தொழில் நுட்பக் கழக இயக்குநர் டாக்டர்.அகிலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறுகையில், அப்பெக்ஸ் பதவி நிலையை கொண்டுள்ள விஞ்ஞானியும், விண்வெளி ஆணையத்தின் தலைவருமான முனைவர். நாராயணன் பங்கேற்று பட்டங்களை வழங்கு கிறார். இந்த விழாவில் 2045 பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மாணவி ஜெயஸ்ரீ தொழில்நுட்ப இளங்கலையில் ஒட்டுமொத்த மிக உயர்ந்த மதிப்பெண் பெற்றதற்கான மதிப்புமிக்க குடியரசுத்தலை வர் பதக்கத்தையும் பெற உள்ளார், மேலும், எம்.ஏ பட்டதாரிகள் நிறுவன பதக்கங்களையும் பெறுகின்றனர். திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில் நுட்பக் கழகம் சிறந்த என்ஐடி ஆக திகழ்வது டன், பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்த போதிலும் என்ஐடியில் பயின்ற 1,322 மாணாக்கர்கள் முன்னணி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது’’ என்றார்.