சென்னை, ஏப்ரல் 21- தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மையங்களுக்கு வகு ப்பறைகள் உடன் கூடிய 2100 சமையலறைகள் ரூபாய் 113 கோடி செலவில் கட்டப்படும் என்று அமைச் சர் கீதாஜீவன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. பின்னர் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பி.கீதா ஜீவன்,” தமிழ்நாட்டில் தற்போது 75 லட்சம் மூத்த குடிமக்கள் உள்ளனர் இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டு களில் 1.42 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்களின் நலன் பாதுகாப்பு சுகாதாரம் ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்கு வதற்கு அவர்களுக்காக செயல் படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகித்து வகையில் ஒரு பிரிவு உருவாக்கப்படும்” என்றார். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு, பொருளாதார பின்ன டைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினர் தற்கொலை, குழந்தை களையும் சேர்த்துக் கொலை செய்வது. வரதட்சணைக் கொலைகள், பாலியல் ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதுணையான சேவைகள் அனை த்தையும் ஒரே இடத்தில் வழங்க 10 மாநகராட்சிகளில் 11 கோடி செல வில் ஒருங்கிணைந்த சேவை பிரிவுகள் அமைத்துக் கொடுக்கப் படும் என்றும் அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் பாலின குறித்து நிதிநிலை அறிக்கையை உறுதி செய்வதற்காக அனைத்து துறைகளி லும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும்.