tamilnadu

img

செங்கல்பட்டு மாவட்டத்தில் 203 தீக்கதிர் சந்தா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமை வகித்தார். இதில் 136 ஆண்டு சந்தா, 24 ஆறுமாத சந்தா, 43 மாத சந்தாவிற்கான தொகையை மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் வழங்கினர். மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன். வி.தமிழரசி, க.புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.