tamilnadu

img

திருவாரூர் அருகே தரிசாய் கிடக்கும் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள்

திருவாரூர், ஜூலை 3 -  காவிரி பாசன டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று. இந்நக ரத்தை ஒட்டி பழவனக்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்கள் மற்றும் மருதம்பட்டினம், கேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியின்றி சுமார் 10 ஆண்டு காலமாக தரிசாகக் கிடக்கின்றன. இப்பகுதிக்கு பாசன வசதி பெற்றுத் தரக் கூடிய ஏ, பி வாய்க்கால்கள் தூர்வாரப் படாமல் உள்ளதும், அகற்ற முடியாத பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் முற்றிலுமாக தூர்ந்து போய் இருப்பதும் இந்நிலங்கள் தரிசாய் கிடப்பதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.  திருவாரூர் நகரம் மற்றும் எழுவேலி, இருவேலி, கூத்தாம்பாடி, பழவனக்குடி, ரோட்டுத்தெரு, மொச்சக்குடி, பிலாவடி மூலை, பேட்டை நத்தம் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்கள் வழியாக சுமார் 7 கி.மீட்டர் தூரம் பயணித்து, விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கக்கூடிய வெண்ணாறு பிரிவு ஓடம்போக்கி ஆற்றுப்பாசனம் நிர்மூல மாக்கப் பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் பலரின் திட்டமிட்ட சதி இருப்பதாக இப்பகுதி மக்களும் விவசாயிகளும் மனம் கொந்தளிக்கின்றனர்.

கள ஆய்வு

விவசாயிகளின் அழைப்பை ஏற்று இப்பகுதியை ஆய்வு செய்த போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒரு குழு வாக செயல்பட்டு சுமார் 10 ஆண்டு காலம் பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்த போதும், அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. ஆட்சிகள் மாறினாலும் ஆக்கிர மிப்புகளை அகற்றுவதற்கான எந்தவொரு உறுதியான செயல்திட்டமும் இல்லை.  இப்பகுதியின் நிலை குறித்து பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை பொறியாளரை தொடர்பு கொண்டு பேசிய போது, “இவ்வாய்க்காலில் நிறைய அக்கிர மிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற நட வடிக்கை எடுப்பதற்காக நகராட்சிக்கு முறை யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த வாய்க்கால் குறித்து நில அளவை  செய்து விவரங்களை அளிக்க வட்டாட்சி யருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அவர்கள் பார்ம்-1 அறிக்கை கொடுத்த பிறகு முறையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தகவல் தெரிவித்தார். 

பழவனக்குடி ஊராட்சி

பழவனக்குடி ஊராட்சியில் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை மட்டும் நம்பி வாழக்கூடிய மக்களாக இவர்கள் உள்ள னர். வசதி படைத்தவர்கள், ரியல் எஸ்டேட்  மனப்பான்மை கொண்டவர்கள், நீர்நிலை களைப் பற்றி கவலைப்படாமல், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் உள்ளிட்டோரால் இப்பகுதியில் இந்த துயரம் நிலவுகிறது. மேலும் அரசியல்வாதிகளின் தலையீடும் அதிகாரிகளை செயலற்றவர்களாக ஆக்கி விடுகிறது.  இந்த ஊராட்சியின் மையப் பகுதியில் உள்ள ஆலமரத்தடியில் திரண்டிருந்த ஊர்மக்களிடம் பேசிய போது, ஆண்-பெண் விவசாயிகளான பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.  அப்பகுதியின் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் எம்.கவிதா(34) கூறுகையில், ‘கடந்த பல ஆண்டுகளாக தலைப்பு வாய்க்கால் தூர்வாரப்படாமல் கிடக்கிறது, தூர்வாரினாலும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவு நீர்களால் தூர்ந்து போய் விடுகிறது. இத னால் அன்றாடம் பிழைப்பு தேடி வெளியூர் களுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்’ என்றார் வேதனையுடன். சக விவசாயிகளான எம்.குணசேகரன்  (51), கே.இமயவரம்பன் (65) ஆகியோர் கூறுகையில், ‘நாங்கள் தொடர்ச்சியாக இப்பிரச்சனையை கையில் எடுத்து போராடி வருகிறோம். நகராட்சியின் கழிவுகள், சாக்க டைகள் இவ்வாய்க்காலில் திறந்து விடப் படுவது குறித்து நகராட்சி ஆணையரிடம் பல முறை முறையிட்டுள்ளோம். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்களை யும் நடத்தியுள்ளோம். எதற்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை’ என்றார்.

சமூக ஆர்வலர்கள்

இயற்கை விவசாயியும் நகர்மன்ற உறுப்பினருமான சமூக ஆர்வலர் ஜி.வரத ராஜன் கூறுகையில், முதலமைச்ச ரின் சொந்த தொகுதியில், திருவாரூர் நகரத்தின் மையப் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடி யாமல் பலராலும் தடுக்கப்படுகிறது. இப்படியே விட்டுவிட்டால் நில அபகரிப்பு செய்யலாம், ரியல் எஸ்டேட் தொழிலை விரி வுப்படுத்தலாம் என்று பலரும் எண்ணுகின்ற னர். ஒன்றிய அரசின் ஓஎன்ஜிசியும் இப்பகுதி நிலங்கள் மீது கண் வைத்துள்ளது. 

ஊராட்சி மன்ற தலைவர்

இந்தப் பின்னணியில் இப்பிரச்சனை குறித்து பழவனக்குடி ஊராட்சி மன்றத் தலை வர் வி.இளவரசனை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘இந்த வாய்க்காலின் தலைப்பி லிருந்து 3 கி.மீ தொலைவு வரை நகரப் பகுதிக்குள் வருகிறது. கழிவுநீர் கலப்பதால் வாய்க்காலின் நீரோட்டமே எதிர்திசையில் மாறியிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கடந்த மே 1 அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் நடவடிக்கைகளுக்கு எனது  முழு ஆதரவு உண்டு’ என்றார். ஒரு சில பெரு விவசாயிகள் இலவச  மின்சாரம் பெற்று பம்ப் செட் மூலமாக சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் இப்பிரச்ச னையில் ஆர்வம் காட்டுவதில்லை. அதிலும் சில செல்வாக்கு பெற்ற விவசாயிகள், இப்பிரச்சனையில் யாரும் தலையிட வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி எந்த தீர்வும் எட்ட முடியாமல் செய்து விடுகிறார்கள் என்றும்  இப்பகுதி மக்கள் கவலையுடன் கூறு கிறார்கள்.  பெரும்பாலான சிறு-குறு விவசாயிகள் தங்களின் நிலத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். விவசாயம் இல்லாததால் வேறு பல வேலைகளுக்கு செல்வது, மாவட்டங்களுக்கு இடம்பெயர்வது என்பது தொடர்கிறது. பொன்விளையும் பூமி இப்படி தரிசாகக் கிடப்பது கண்டு இந்த ஊராட்சி மக்கள் கனத்த மனதுடன் கண்ணீர் வடிக்கிறார்கள்.

விவசாயிகள் சங்கம் 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி கூறுகையில், ‘அதி காரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து நடப்பாண்டில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு சம்பா பாசனத்திற்காவது தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.  இல்லையெனில், அப்பகுதி விவசாயிகளை திரட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம்’ என தெரிவித்தார்.  நேரடியாக சென்று கள ஆய்வு செய்தபோது, முப்போகம் விளையக் கூடிய அனைத்துக் கட்டமைப்பும் இருந்தும்கூட, திட்டமிட்டு இப்பகுதி விளைநிலங்கள் தரிசாக ஆக்கப்பட்டிருப்பது தெரிய வரு கிறது. இப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வா தாரம் மேம்பட தங்கள் வயல்களில் விவசா யம் செய்ய விரும்புகின்றனர். அவர்களை விவசாயத்திலிருந்து வெளியேற்ற நினைப்பது ஏற்புடையதல்ல.  ஊராட்சி முழுவதும் கிளை வாய்க்கால் களும் தூர்ந்து போயுள்ளன. ஏ, பி, சி வாய்க் கால்களை முழுமையாக தூர்வாரி, இப்பகுதி மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி பாது காக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறைகளும் முன்வர வேண் டும். தங்களின் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள எத்தகையப் போராட்டத்துக்கும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர். இப்பகுதி மக்களுடன் ஏனையோரும் கரம் கோர்த்து விவசாயத்தைப் பாதுகாக்க துணை நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

- வ.வசந்தராஜன்