சென்னையில் மட்டும் 20 சதவீத மளிகைக் கடைகள் மூடல்
ஆன்-லைன் வர்த்தகம் அதிகரிப்பு, மின் கட்டணம், வாடகை உயர்வு போன்ற காரணங்களால் மளிகை துறை நசிந்து வருவதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னை யில் மட்டும் சுமார் 20 சதவீத மளிகைக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சென்னையில் கடந்த 5 ஆண்டு களுக்கு முன் சிறிய மளிகை கடை களின் எண்ணிக்கை 10,645 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 8,476 ஆக குறைந்துள்ளது. 2,169 மளிகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
அதாவது 20 சதவீதம் மளிகை கடைகள் சென்னையில் மூடப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் மளிகை தொழி லில் ஈடுபடுவதாலும், அதிக சலுகை கள், ஆன்-லைன் விற்பனை போன்ற வற்றாலும் மளிகை கடைகள் போட்டி போட முடியவில்லை என்கிறார்கள் இத்தொழிலில் உள்ளவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் சிறிய மளிகை கடைகளில் வியாபாரத்தில் விற்பனை சரிவு சிறிய கடைகளில் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். 27 சதவீதம் அளவில் மளிகை வியாபாரம் தற்போது ஆன்-லைன் மூலம் நடைபெறுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக் கின்றனர். கடை நடத்தும் இடத்தில் வாடகை உயர்ந்து வருவது கட்டிடத்தின் சொத்து வரி உயர்வு தருணமாகும்.
மின் கட்டண உயர்வும் ஏற்பட்டுள்ளது. மளிகை கடை நடத்துபவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலையே தொ டர்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத் தில் பலரும் கடையை நடத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாகவும் மளிகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தொழில் செய்பவர்களும் பொருட் களை வாங்க கையில் இருந்து பணத்தை கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது. இதே நிலை நீடித்தால் தொழில் நசிந்து வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நிலை இருப்பதாக வணிகர்கள் தெரி விக்கிறார்கள். ஒரு மளிகை கடை வைத்து தனது குடும்பத்தின் உழைப்பை முழுவதும் அதில் செலுத்தி வாழ்க்கையை நடத்தி வரும் தொழில்தான் தற்போது அவர்களின் கையை விட்டு நழுவி பெரும் முத லாளிகளின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று வேதனை யாக கூறுகிறார்கள்.