tamilnadu

சூரத்தில் விஷவாயு கசிவால் 6 பேர் பலி

சூரத், ஜன.6-  குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் தொழிற்சாலை  ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணிபுரிந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் மூச்சுத் திண றலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் அங்கு பணிபுரிந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து இரவில் வாயு கசிந்ததால் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து, வாயு கசிவால் 6 பேர்  உயிரிழந்தனர். மேலும் உடல்நலகுறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி இரங்கல் 

இந்த நிலையில் சூரத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சூரத்தில் விஷவாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் விரைவில் குண மடைய வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.