tamilnadu

img

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த 20 குடும்பங்கள்

மதுரை, மார்ச் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு முதலாம் பகு திக்குழு சார்பில் 23- ஆவது மாநில மாநாட்டு பிரச்சாரக் கூட் டம் சனிக்கிழமை முத்துராம லிங்க புரத்தில் கிளைச் செயலா ளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது சசிகுமார், பிச்சை மணி முன்னிலை வகித்தனர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா சிறப்புரையாற்றினர் அப்போது அப்பகுதியில் வசிக் கும் சுமார் 20 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்வில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிக்குழுச் செயலாளர் க. கணேசன், வாலிபர் சங்க பகு திக்குழுச் செயலாளர் க.கௌதம் பாரதி, பகுதிக்குழு உறுப்பினர் கள் கா. இளங்கோவன், பாண்டி முத்துக்குமார், ஜி. சுதாராணி கிளை செயலாளர்கள் அமுதா, தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.