திருச்செந்தூர், ஜூன் 30- திருச்செந்தூர் துணை வட்டாட்சியர் கோபால் தலைமை யில், உடன்குடி வருவாய் ஆய்வாளர் தாஹிர் அஹமது உள்ளிட்டோர், உடன்குடி ஜேஜே நகர் பகுதியில் மணல் லாரிகளை ஆய்வு செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கரம்பை மண் அள்ளிச் சென்ற இரு லாரிகளை பறிமுதல் செய்து மெஞ்ஞானபுரம் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் வளனேரியைச் சேர்ந்த வீரபாண்டியன், பூவாளியைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.