tamilnadu

img

2 நாட்கள் பேரவைக் கூட்டம்

சென்னை,ஜன.5- தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 7ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5 அன்று காலை  10  மணிக்கு கலைவானர் அரங்கில் நடை பெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கி லத்தில் தனது உரையை வாசித்தார். அவரது உரைக்குப் பின்னர் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழில் வாசித் தார். இதனைத் தொடர்ந்து கூட்டத் கூட்டம் முடிந்தது. இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. இதில், ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் மட்டும் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. 6 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி  தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. மறுநாள் முதல மைச்சர் பதிலுரை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.