மதுரை அழகர்மலை அடிவாரத்தில் 194 சாம்பல் நிற தேவாங்குகள்
மதுரை, ஜூன் 12 - மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர்மலை அடிவாரமான கேசம் பட்டி, கம்பூர், சேக்கிபட்டி ஊராட்சி களில் காணப்படும் சாம்பல் நிற தேவாங்குகள் குறித்தும் அவைகள் எதிர்கொள்ளும் வாழ்விடச் சவால்கள் குறித்தும் அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை விலங்கியல் மாண வர் ஆ.ஜஸ்வின் மேஷாக் ஸ்மைல், நான்கு மாதம் கள-ஆய்வை மேற்கொண்டார். மதுரை மாவட்டத்தில் தேவாங்கு களின் பரவல், அவற்றின் வெவ்வேறு வாழ்விட நடவடிக்கை மற்றும் தேவா ங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்து தல் ஆகிய நோக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு, விலங்கியல்துறை இணை பேராசிரியர் ராஜேஷ் வழி காட்டுதலில் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்து ஜஸ்வின் கூறுகையில்,”தேவாங்கு (Lorisidae) குடும்பத்தில் சாம்பல் நிற தேவாங்கு (Loris lydekkerianus) மற்றும் வங்காள தேவாங்கு (Nycticebus bengalensis) என இரு சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அதில் சாம்பல் நிற தேவாங்கு உலகில் இலங்கை மற்றும் தென்னிந்தியப் பகுதி யில் மட்டுமே காணப்படுகிற அரிய உயிரினம். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சாம்பல் நிற தேவாங்கை அச்சுறுத்தலை சந்திக்கும் (NT) விலங்கென ஆய்ந்து சிகப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரமான கேசம்பட்டி, கம்பூர், சேக்கிபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சாம்பல் நிற தேவாங்குகள் (Loris lydekkerianus) குறித்து ஆய்வு செய்ய தேர்ந்தெடுத் தேன். இப்பகுதிகளில் காணப்படும் கோவில் காடுகள், நீர்நிலை கரையோர காடுகள், மலைக் குன்றுகள், வேளாண் பகுதிகள் என பல பகுதியில் ஆய்வை மேற்கொண்டேன். இந்த ஆய்வு கடந்த டிசம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை என மொத்தம் நான்கு மாதங்கள் நடைபெற்றது. ஆய்வின் போது எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமாக 194 சாம்பல் நிற தேவாங்குகளை பதிவு செய்தேன். கேசம்பட்டி கிராமத்தில் அதிகபட்சமாக 111 தேவாங்குகள் காண ப்பட்டன. மற்ற இரு ஊராட்சி களான கம்பூர் மற்றும் சேக்கிபட்டி யில் முறையே 55 மற்றும் 28 தேவாங்கு கள் பதிவாகியிருந்தன. ஆய்வு மேற் கொண்ட காலத்தில் அதிக எண்ணிக்கை யிலான தேவாங்குகள் (91) டிசம்பர் மாதத்திலும், குறைந்த எண்ணிக்கை யிலான தேவாங்குகள் (17) மார்ச் மாதத்திலும் பதிவாயின. மார்ச் மாதத்தில் தேவாங்குகள் குறைவாகக் காணப்படுவதற்கான ஒரு காரணமாக, மாம்பழத் தோட்டங்களில் பயன்படுத்த ப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கக்கூடும். இது அவற்றின் இயல்பான நடத்தை மற்றும் வாழிடப் பயன்பாட்டை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம். சாலை விபத்துகள் மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகள் தேவாங்குகளுக்கு அதி கரித்து வரும் ஒரு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. சாலைகள் விரிவடைவ தால் அவற்றின் வாழ்விடம் துண்டிக் கப்படுகிறது. மரங்களில் வாழும் இவை சாலைகளை கடக்க வேண்டிய சூழ்நிலையில் பலி ஆகும் வாய்ப்பு அதிகம். பல மரணங்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன. தேவாங்குகள் சாலை விபத்தில் பலியா வதை தடுக்க, சாலையின் இருபக்கம் உள்ள மரங்களை இணைக்கும் ஏணி வடிவிலான பாலம் அமைக்கலாம். சாலை அருகே, ‘தேவாங்குகள் சாலை யை கடக்கும் பகுதி’ என்கிற வகையிலான எச்சரிக்கைப் பலகை, சின்னங்கள், தேவாங்குகள் சாலையை கடக்கும் முக்கியமான இடங்களில் சாலையின் இருபக்கமும் அமைக்கப் பட வேண்டும். தேவாங்குகள் அடர்த்தி யாக வாழும் பகுதிகளை கண்டறிந்து அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அல்லது பல்லுயிரி மண்டலமாக அறிவித்து பாதுகாக்கலாம்” என ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாக ஜஸ்வின் தெரிவித்தார்.