சென்னை, பிப்.21- நகர்புப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள 1,700 டாஸ்மாக் மதுக்கடைகள் செவ்வாய்கிழமை (பிப்.21) மூடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படு கின்றன. அவற்றில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள 1,700 டாஸ் மாக் மதுக்கடைகள் மூடப்படு கின்றன. வாக்கு எண்ணக் கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடை கள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 268 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் 15 இடங்களில் நடக்கிறது. அதனால் அந்த பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 10 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டன. இது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணி யன் கூறியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறு கின்ற பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி செவ்வாயன்று 3-ல் ஒரு பங்கு கடைகள் அடைக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு கடைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.