17 எம்.பி.,க்களுக்கு சன்சத் ரத்னா விருது
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர் களைச் சிறப்பிக்கும் வகையில் “பிரைம் பாயிண்ட்” அறக்கட்டளையால் “சன்சத் ரத்னா” விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 16 மற்றும் 17 ஆவது மக்களவையில் சிறந்த பங் காற்றியதற்காக “சன்சத் ரத்னா” விருது பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான தேசிய ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ளது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் :
சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்), பருத்ஹரி மஹ் தாப் (பிஜு ஜனதா தளம்), என்.கே. பிரேமச்சந்திரன் (சமூகப் புரட்சிக் கட்சி), ஸ்ரீரங் அப்பா பர்னே (சிவ சேனா), ஸ்மிதா வாக் (பாஜக), அர விந்த் சாவந்த் (சிவசேனா - உத் தவ்), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவ சேனா), வர்ஷா கெய்க்வாட் (காங் கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), பித்யூத் பரன் மஹாதோ (பாஜக), பி.பி.சௌத்ரி (பாஜக), மதன் ராத் தோர் (பாஜக), சி.என்.அண்ணா துரை (திமுக), திலீப் சைக்கியா (பாஜக) ஆகியோருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே... “
சன்சத் ரத்னா” விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 எம்.பி.,க்களில் வெறும் 6 பேர் மட்டுமே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 11 பேர் பாஜக வைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரி ணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜன தாதளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 11 ஆண்டு களுக்குப் பிறகு திமுக எம்.பி., சி.என்.அண்ணாதுரை (திரு வண்ணாமலை) மூலம் தமிழ்நாட் டிற்கு சன்சத் விருது கிடைத்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.