மயிலாடுதுறை, ஏப்.19- மயிலாடுதுறை வந்த தமிழக ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் 16 அமைப்புகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடிகளை ஏந்தி கண்டன முழக்கமிட்டு ‘‘கவர் னரே திரும்பிப் போ’’ எனக் கூறி போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமை ஆதீன பல்பொருள் அருங் காட்சியகம் மற்றும் ஞானரத யாத்தி ரையைத் தொடங்கி வைக்க செவ் வாயன்று வருகைதந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள் ளிட்ட 16 அமைப்புகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் மன்னம்பந் தல் கல்லூரிக்கு முன்பு ஆளுந ருக்கு எதிரான வாசகங்களை ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரத்திலிருந்து திருக்கடை யூர் அமிர்தகடேஷ்வரர் ஆலயத் திற்கு சென்று விட்டு மன்னம்பந் தல் வழியாக தருமபுரம் சென்ற ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து காவல் துறை போராட்டத்திற்கு இடையூறு தந்ததால் ஆத்திரமடைந்த போராட் டக்குழுவினர் கருப்புக் கொடி களை ஆளுநரின் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களின் மீது வீசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், திரா விடர் கழக மாவட்ட செயலாளர் தளபதிராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் 16 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகி கள் போராட்டத்தில் கலந்து கொண் டனர். தமிழக மக்களின் உரிமை களுக்கு எதிராக செயல்படும் ஆளு நருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனை வரையும் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்த னர்.