tamilnadu

தமிழகத்தில் இன்று 14ஆவது மெகா தடுப்பூசி முகாம்

சென்னை, டிச. 10 - தமிழகம் முழுவதும் இன்று (டிச.11) 14ஆவது மெகா கோவிட் தடுப்பூசி முகாம்  நடைபெறுகிறது. தமிழகத்தில் டிச.9ந் தேதி வரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசி கள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 80  லட்சம் பேர் 2ஆவது தவணையும் போடா மல் உள்ளனர். இந்த நிலையில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடை பெறுகிறது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம்  மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கி யுள்ள நிலயில், தடுப்பூசி செலுத்திக் ்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாது காத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனை வரும் தடுப்பூசி செலுத்திக்்கொள்ள வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.