tamilnadu

img

பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், கே.சுப்பராயன் உள்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; மோடி அரசு அராஜகம்

நாடாளுமன்றத்தில் குண்டுவீச்சு    அமித் ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் ஆவேசப் போராட்டம்

புதுதில்லி, டிச.14- நாடாளுமன்ற மக்களவைக்கு உள் ளேயே நுழைந்து இருவர் புகைக் குண்டு களை வீசிய- பாதுகாப்புக் குறைபாடு விவகாரத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்; தார்மீக அடிப்படையில், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இந்தக் கோரிக்கையை முன் வைத்து, நாடாளுமன்றத்தின் இரு  அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் குரலெழுப்பி போராடிய நிலை யில், விவாதம் நடத்துவதற்கு தயாராக இல்லாத ஒன்றிய பாஜக அரசு, நாடாளு மன்றத்திற்கு பாதுகாப்பு அளிக்க முடி யாத தங்களின் தோல்வியை மறைப்ப தற்காக எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு பற்றி  அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்று  வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பி னர்களை- மாநிலங்களவையில் ஒரு வர், மக்களவையில் 13 பேர் என மொத்  தம் 14 பேரை- கூட்டத்தொடர் முழு வதும் நாடாளுமன்றத்திற்கே வரமுடி யாதபடி சஸ்பெண்ட் செய்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆவேசம்

வியாழனன்று காலை மக்களவை கூடியதும், புதனன்று பெரும்  பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய புகைக்குண்டு வீச்சு விவ காரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளப்பினர்.  அவர்களுக்கு, ஒன்றிய அரசின் பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  விளக்கம் அளித்தார். “மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்  டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனை வரும் பார்வையாளர்களுக்கான பரிந் துரை கடிதத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளும் எடுக்கப்படும்” என்று சமா ளித்தார்.  அப்போது, குண்டு வீசியவர்களை, நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனு மதி அளித்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன  என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். வெடிகுண்டோ, வெடிக்காத புகைக்குண்டோ.. அவை  எதுவானதும், ஜனநாயகக் கோவிலான  நாடாளுமன்றத்திற்கு வந்தது எப்படி?  நாடாளுமன்றத்தின் உச்சபட்ச பாது காப்பில் ஓட்டை விழுந்தது எப்படி?  பாஜக எம்.பி.யின் மூலமே சம்பந்தப் பட்டவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், இதன் பின்  னணியில் இருக்கும் மர்மம், நாடாளு மன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரி விக்கப்பட வேண்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபற்றி விளக்  கம் அளிக்க வேண்டும் என்று முழக் கங்களை விடுத்தனர். இவ்வாறு கேள்வி  கேட்க வேண்டியது எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடமை என்றும் குறிப்பிட்டனர்.

ஆனால், இந்த பிரச்சனையை தவிர்ப்பதிலேயே பாஜக அரசு குறியாக இருந்ததால், ஆவேசமடைந்த எதிர்க்  கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து, மீண்டும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சரின் சமாளிப்பு முயற்சி 

பின்னர், மீண்டும் அவை கூடிய போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், ‘’நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. உறுப்  பினர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட் டது. எனவே, இது குறித்து அரசு கவலை  கொள்கிறது” என்று கூறியதுடன், “இது போன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நாடா ளுமன்றத்தில் நடந்துள்ளன. 1974-ஆம்  ஆண்டு ஏப்ரல் 11 அன்று நாடாளுமன்றத்  தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து  ரத்தன் சந்திர குப்தா என்பவர் உரக்கக்  குரல் எழுப்பினார். அவரிடம் 2 துப்பாக்கி கள், ஒரு வெடிகுண்டு, துண்டு அறிக்கை கள் ஆகியவை இருந்தன. அதே ஆண்டு  ஜூலை 26 அன்று பிப்லப் பாசு என்பவ ரும், நவம்பர் 26 அன்று சத்யதீப் சிங்  என்பவரும் பார்வையாளர் மாடத்துக்கு  வெடி பொருட்களைக் கொண்டு வந்த னர். 1999 அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய  இரண்டு தேதிகளில் இருவர் மக்களவை யின் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்” என்று சமாளிப்பு முயற்சியில் இறங்கினார்.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் விளக்கமளிக்க மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டும், பதாகை களைக் காட்டியும் போராடிய நிலையில், டி.என். பிரதாபன், ஹைபி ஈடன், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய 5 காங்கிரஸ் எம்.பி.க்களை, இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிய அது நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் எதேச்ச திகார சஸ்பெண்ட் நடவடிக்கையை கேள்வி எழுப்பியும் ஏனைய எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களையும் சஸ்பெண்ட் செய்யும் வகையில் இரண்டாவது தீர்மானத்தையும் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். இதனையும் குரல் வாக்கெடுப்பு மூலம் மோடி அரசு நிறைவேற்றியது.  இந்த இரண்டாவது தீர்மானத்தின் மூலம் வி.கே. ஸ்ரீகண்டன் (காங்), பென்னி பெஹனன் (காங்), முகமது ஜாவேத் (காங்.), பி.ஆர். நடராஜன் (சிபிஐ-எம்), கனிமொழி (திமுக), கே. சுப்பராயன் (சிபிஐ), சு. வெங்கடேசன் (சிபிஐ-எம்), மாணிக்கம் தாகூர் (காங்) ஆகிய 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

எம்.பி.க்கள் போராட்டம்

ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் மக்களவை உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்களுக்கு நீதி வேண்டும், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

மாநிலங்களவையில் கொந்தளிப்பு

முன்னதாக, மாநிலங்களவையிலும், இதேபோல அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததாக கூறி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரை யனை, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தார். இது மாநிலங்களவையில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. டெரிக் ஓ பிரையன் மீதான இந்த சஸ்பெண்ட் நடவ டிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, சிபிஐ எம்.பி.க்கள் பினோய் விஸ்வம், பி.சந்தோஷ் குமார், திரிணாமுல் எம்.பி. டோலா சென் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். “நாடாளுமன்றத்தை மதிக்காத ஒரு தோல்வி யடைந்த அரசாங்கம் இப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் தனது சொந்த வழியில் குழப்ப முயற்சிக்கிறது, நாங்கள் அதை மக்கள் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வோம். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நாங்கள் ஏற்கப் போவதில்லை. இது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கும், எதேச்சதிகா ரத்துக்கும் எதிரானது. நுழைவுச்சீட்டு கொடுத்த குற்ற வாளியான பாஜக எம்.பி. இன்னும் மக்களவையில் இருக்கிறார், அவர் மீது இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், போராட்டம் நடத்துபவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். இது வெட்கக் கேடானது” என்று கடு மையாகச் சாடினர். மேலும், “தேசத்தின் பாது காப்புக்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் ஏன்  பதிலளிக்க மறுக்கிறார்... ஏன், அவர் நாடாளுமன் றத்திற்கே வரவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.