புதுக்கோட்டை, நவ.16 - புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார்கோவில் ஒன்றியம் வத்தனாக் குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன் கோவில் பகுதியில், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 துண்டுக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வா ளர் க.கருணாகரன் கண்டெடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: வத்தனாகுறிச்சியில் ஊருக்கு வடக்குப் புறமாக பிடாரிக் கோயிலின் பின்புறமாக உள்ள வயல் நடுவில் முற்றிலும் இடிந்த நிலையில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. குளமாங்கல்யநாட்டுப் பகுதியைச் சேர்ந்த இந்தக் கோவில் வளாகத்தில் துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இதனை ஆய்வு செய்தபோது, ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்று மங்கலச் சொல்லுடன் தொடங்கிய இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் முதலாம் வீரப்பாண்டியனின் எட்டாவது ஆட்சி யாண்டில் (13 ஆம் நூற்றாண்டு) செயசிங்ககுலகால வளநாட்டு (குளமங்கல நாட்டு) சோரப்பிள்ளை முனைய மானேன் என்பவர் நிலக்கொடை கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகளில் சில எழுத்துகள் சிதைந்துள்ளதா லும் மற்றக் கல்வெட்டு கிடைக்காத நிலையில் உள்ள தாலும் முழுச்செய்தியையும், ஊர் மற்றும் ஈஸ்வரனின் பெயர் முதலியவைகளை அறிய இயலவில்லை. தற்போது முற்றிலும் இடிந்துள்ள இக்கோயிலில் இருந்த ஈஸ்வரன், அம்பாள், பைரவர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி ஆகியோரின் சிற்பங்கள் ஊரின் வடக்குப் புறமாக ஈஸ்வரன் பாறை என்ற இடத்தில் சிறிய அளவில் ஓட்டுக் கொட்டகை அமைத்து அதில் இச்சிற்பங்களை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், இடிந்த இந்த சிவன் கோயிலிலுள்ள கருங் கற்களை கொண்டு, தற்போது ஊர் மக்கள் முருகன், விநாயகர் மற்றும் பிடாரி ஆகியக் கோயில்களை கட்டியுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.