tamilnadu

img

கணித மேதை சீனிவாச ராமானுஜரின் 134 ஆவது பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை, டிச.12-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் கலைக்கல்லூரியில் கணித மேதை சீனிவாச ராமானு ஜரின் 134 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளியன்று கொண்டா டப்பட்டது.  நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு கணித மேதை ராமானுஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், கல்லூரி செய லாளர், முதல்வர், தாளாளர், நிர்வாகி , கணிதத் துறை தலை வர் மற்றும் பேராசிரியர்கள் மலர் தூவி மரியாதையை செலுத்தி னர். கல்லூரி செயலாளர் அருட்சகோதரி கருணா ஜோசபாத், முதல்வர் . காமராசன், தாளாளர் அருட்சகோதரி மெர்சி தங்கம், நிர்வாகி அன்னை அருட்சகோதரி வின்சென்ட் அமலா முன் னிலை வகித்தனர். கணித த்துறை உதவி பேராசிரியர் முனை வர் விஜயபாலன் வரவேற்றார்.  கணித விழாவின் முக்கியத்துவம் குறித்து உதவி பேராசிரி யர் பி.இருதயராஜ் முனைவர் சாந்தி, முனைவர் லலிதா, முனை வர் ஹெலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார். உதவி பேராசிரி யர் அருட்சகோதரி கிரேசி நன்றி கூறினார். நிகழ்ச்சியை கணித துறைத் தலைவர் முனைவர் ச. ஆனந்த் ஞானசெல்வம் உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.