சென்னை, ஜன.7- மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல் கட்ட மாக ரூ.132.12 கோடி விடுவிக்கப்பட் டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆளு நர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவா தங்களுக்கு வெள்ளியன்று(ஜன.7) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதி லளித்து பேசினார். அப்போது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராமச்சந்திரன் ஆகி யோர் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என பேசியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “குறுவை பருவத்தில் விளைந்த பயிர் கள், சேதமடைந்த முன் பருவத்தில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள், மறு நடவு செலவு, எண்ணெய் வித்துப் பயிர்கள், சிறுதானிய பயிர்கள், கரும்பு பயிர்கள் மற்றும் தென்னைப் பயிர்களுக்கு நிவாரணமாக 1 லட் சத்து 62 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிக மான நிலங்களுக்கு நிவாரணமாக 132 கோடியே 12 லட்ச ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார். சிறு, குறு, பெரு விவசாயிகள் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு அதிகமா னோர் பயனடையும் வகையில் இந்த நிவாரண நிதி இரண்டொரு நாட் களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கு களில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஒன்றிய அரசிடமிருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை என்றாலும், விவ சாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கும் என்றும் தெரிவித்தார்.
மிரட்டும் ஒமைக்ரான்: தடுப்பூசியே அரண்
இந்த அரசு பதவியேற்ற கடந்த 6 மாதகாலத்தில் ஏராளமான சாதனை களையும் படைத்திருக்கிறது. சோத னைகளையும் சமாளித்துள்ளது. குறிப்பாக, கொரோனா முதல் அலை யை எதிர்கொண்டோம். பிறகு, 2ஆவது அலையை முற்றிலும் கட்டுப் படுத்தினோம். இப்போது ஒமைக்ரன் மிரட்டுகிறது. இந்த வைரஸை எதிர்கொள்ள வேண்டும் என்றால் தடுப்பூசியே தடுப்பு அரண். இதனை மக்கள் இயக்கமாக மாற்றியதால் தற்போது வரைக்கும் 8 கோடியே 76 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது என்றும் அடுத்த கட்ட மாக, முன்களப்பணியாளர்களுக்கு கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த அரசு உயிர் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது என் றும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். தேர்தல் அறிக்கையில் சொன் னதை படிப்படியாக நிறைவேற்றி வரும் இந்த அரசு, அரசுப் பள்ளிகளை அனைவரும் விரும்பும் பள்ளிகளாக மாற்ற திறன் மிகு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இது கல்வியில் புரட்சியை உருவாக்கும் என்றும் கூறி னார். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதால் யார் எங்கு பதுங்கி னாலும் விடமாட்டோம் என்றும் திமுக வினர் தவறு செய்வதாலும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த அரசு ஒளிவு மறை வற்ற அனைவருக்கும் ஒளிதரும் அர சாக செயல்படுகிறது என்றும் முத லமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.