தருமபுரி, டிச.3- தருமபுரியில் தீக்கதிர் நாளிதழுக்கு 103 சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டன. தருமபுரி செங்கொடிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி அலுவலகத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், 103 தீக்கதிர் சந்தா வுக்கான தொகை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 250 முதல் தவணையாக வழங்கினார். இந்நிகழ்வில், தீக்கதிர் கோவை பதிப்பின் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.சிசு பாலன், டி.எஸ்.ராமச்சந்திரன், சோ.அருச்சு ணன், இடைகமிட்டி செயலாளர்கள் ஆர். ஜோதிபாசு, என்.கந்தசாமி, எஸ்.எஸ்.சின்ன ராஜ், பி.குமார், தனுஷன், கோவிந்தசாமி, பிர காசம், எழில், சின்னசாமி மற்றும் மாவட்டக் குழு, இடைக்கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.