இடதுசாரி முற்போக்கு கலை இலக்கிய மாத இதழ் செம்மலர் மற்றும் தத்துவ மாத இதழ் ‘மார்க்சிஸ்ட்’ ஆகிய பத்திரிகைகளின் சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. மக்களிடம் சேகரிக்கப்பட்ட சந்தாக்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் திங்களன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு சந்தா தொகையை பெற்றுக் கொண்டார். மொத்தம் 1006 செம்மலர் சந்தாக்கள் மற்றும் 662 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டன.