tamilnadu

அரசு கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு

அரசு கல்லூரிகளில் சேர  1.61 லட்சம் மாணவர்கள் பதிவு

அமைச்சர்  கோவி.செழியன் தகவல்

சென்னை, மே 20- அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கிய 13 நாட்களில், 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகை யில், “தமிழகத்தில் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. திங்கட் கிழமை (மே 19) மாலை 6 மணி நில வரப்படி, 1,61,324 மாணவர்கள் விண்  ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில்  46,691 மாணவர்கள், 75,959 மாணவி கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என  மொத்தம் 1,22,698 மாணவர்கள் விண் ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே 27 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின், தமிழ கம் முழுவதும் 165 உதவி மையங்கள் மற்  றும் மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்தந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது dceofficehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு  கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்” என  தெரிவித்துள்ளார்.