tamilnadu

img

விமான பயணியிடம் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, ஜூலை 17-  துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வ தேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த பொன்னுசாமி (35) என்பவர் மீது சுங்கத்துறை அலுவலர் களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவருடைய உள்ளாடைக ளுக்குள் மறைத்து வைத்திருந்த 55.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.25 கிலோ எடை உடைய தங்கப் பசையை, சுங்க அலுவ லர்கள் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர். இந்நிலையில் துபாயிலிருந்து வந்த மற்றோரு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளை சோதனை யிட்டனர். சென்னையைச் சேர்ந்த தமீம் அப்துல் ரகுமான் (38), திருச்சியைச் சேர்ந்த  முகமது ஹபீபுல்லா (28) ஆகிய 2 பயணி களை சோதனையிட்டனர். அவர்களுடைய உள்ளாடை களுக்குள், 62.81 லட்சம் ரூபாய் மதிப்பு டைய 1.425 கிலொ தங்கப்பசை இருந்ததை கைப்பற்றினர். அத்தோடு அவர்களின் உடமைகளில் இருந்த 18.97 லட்சம் ரூபாய் மதிப்புடைய மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், குங்கு மப்பூக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் பறி முதல் சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், 1.37 கோடி ரூபாய் மதிப்பு டைய 2.675 கிராம் தங்கம், மின்னணு சாத னங்கள், குங்குமப்பூக்கள், சிகரெட்டு களை சுங்கத்துறை அலுவலர்கள் பறி முதல் செய்து, 3 பயணிகளைக் கைது செய்தனர்.