tamilnadu

img

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் திட்டம்

 ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கருத்து பெரம்பலூர், ஜன.28 - ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் திட்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசினார். “ஒரே நாடு ஒரே தேர்தல்” கலந்துரையாடல் நிகழ்ச்சி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில், மாவட்டக் குழு உறுப்பினர் எழுத்தாளர் எட்வின் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டாக்டர் கருணாகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா வெற்றி பெறாது என தெரிந்தும், ஏதாவது ஒரு வழியில் இதை நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிய அரசு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்த திட்டம் நிறைவேறினால், வாக்காளர்களுக்கான மதிப்பை குறைக்கும். மேலும் மாநில கட்சிகளை அப்புறப்படுத்தவும், அதன் ஆதிக்கத்தை குறைப்பதாகவும் அமையும். இத்திட்டம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாக அமையும். எனவே இத்திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அனைவருக்கும் உள்ளது” என்றார். தொடர்ந்து இந்த திட்டம் குறித்து சந்தேகம் மற்றும் விளக்கங்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம்  கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த உரையாடலில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர், மாணவர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் நன்றி கூறினார்.