உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் முறை கேடு நடப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குற்றம் சாட்டினார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் அரிபரந்தாமன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்களன்று (பிப்.17) செய்தியாளர் களைச் சந்தித்தனர். அப்போது நீதிபதி சந்துரு பேசு கையில், “நீதிபதிகள் நியமனம் தொடர் பான புதிய நடைமுறையில், ஒரு மாநி லத்தில் இருந்து யார் உச்ச நீதிமன்றத் தில் பணியாற்றுகிறாரோ அவருடைய கருத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நீதி பதியை கன்சல்டிங் ஜட்ஜ் என்றும் சொல் கிறார்கள். அதாவது அவரை, ‘ஆலோ சனை வழங்கக் கூடிய நீதிபதி’ என்று குறிப்பிடுகிறார்கள். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் இருந்து செல்லக் கூடிய பெயர்களை அதற்கு பரிந்துரைப்ப தற்கு, அங்குள்ள நீதிபதிகளான சுந்தரேஷ் மற்றும் மகாதேவனுக்கு பொறுப்பு இருக்கிறது.
சமூக நீதி பின்பற்றப்பட வில்லை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதி பதிகள் நியமனம் நடைபெறவில்லை. முன்பு, நீதிபதிகள் நியமனத்துக்கு உறுப்பினர்கள் கொண்ட நிரந்தர அமைப்பு இருந்தது. தற்போது, நீதிபதி கள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப் படுவதில்லை. இது நன்றாகவே தெரி கிறது.
உச்ச நீதிமன்றத்தில் 34 விழுக்காடு பிராமண சமுதாயத்தினரே நீதிபதிகளாக உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 விழுக்காடு உள்ள வர்களுக்கு மட்டுமே நீதிபதிகள் நிய மனத்தில் முன்னுரிமை அளிக்கப்படு கிறது. நீதிபதிகளுக்கான பணியிடங்க ளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. போன்ற பிரிவினருக்கு போதிய அளவில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள நீதிபதி பணி யிடங்களில் 79 விழுக்காடு “உயர் சமூக” மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், நீதிபதிகளின் நியமனம் முறையாக நடப்பதில்லை எனத் தெரிய வருகிறது. உச்ச நீதி மன்றம் மற்றும் நாடாளுமன்ற வழி காட்டுதல்படி நீதிபதிகள் நியமனம் நடப்பதில்லை என்பது தெளிவாகிறது. நீதிபதி நியமனமானது ஒரு சில குழுக்களிலிருந்து நியமிக்கப்படாமல், பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். கேரளத்தில் 74 விழுக்காடு அள வுக்கு கீழமை நீதிமன்றங்களில் பெண்கள்தான் நீதிபதிகளாக இருந்த னர். ஆனால் அவர்களில் ஒருவர்கூட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக வர வில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.