திசை திருப்பும் சோதனை’
சென்னை : சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தியது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதால், தமது ஏஜெண்ட் மூலம் (அமலாக்கத்துறை) ஒன்றிய அரசு சோதனை நடத்துகிறது. மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, நிதி பகிர்வு விவகாரத்தை திசைத் திருப்பவே இதனை செய்கின்றனர்; அமலாக்கத்துறை சோதனை முடிந்தால் அவர்களே காரணத்தை கூறுவார்கள்” என்றார்.
பிள்ளை பிடிக்கும் வேலையில் பாஜக
சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற பாஜகவினர், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட மாணவர்களை வற்புறுத்தினர். ஒரு மாணவர் கூட கையெழுத்திடவில்லை. பிறகு, பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட சொன்னார்கள். அப்போதும் சீண்டவில்லை. பாஜகவினரின் பிடியிலிருந்து தப்பித்தால் போதும் என்று மாணவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சர் மகேஸ் எச்சரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூரில் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து கையெழுத்து வாங்குவதாகவும், இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீக்கம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய இயக்கத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் கையெழுத்திட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாகவும், எதிராகவும் செயல்பட்டதால் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். விஜயகுமார், மறைந்த முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் மகன் ஆவார்.
தலைமையிடம் மன்னிப்பு கேட்பு
சென்னை : முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், “தனது சொந்த கிராமத்து வீட்டில் இருந்து வெளியில் வந்து கொண்டி ருந்தேன். எனது காரை வழி மறித்து பாஜகவினர் கையெழுத்து கேட்டனர். நான், இதில் எனக்கு உடன்பாடு கிடை யாது. எங்கள் பொதுச்செயலாளரும் இருமொழிக் கொள்கை யைத் தான் ஆதரிக்கிறார் என்றேன். நீங்கள் கையெழுத்து போட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தான் சொன் னார்கள். இதை கட்சியின் தலைமைக்கும் சொல்லிவிட்டேன். மன்னிப்பும் கேட்டு விட்டேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.