tamilnadu

img

மோடி ‘மெடிடேட்’ என்றுதான் சொன்னார்

மும்பை;
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கடந்த வாரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜி20’ மாநாட் டின்போது பிரதமர் மோடியும் தானும் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருந்து பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்களா?’ என்று மோடி தன்னிடம் கேட்டதாகவும், மேலும், ‘தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்’ என்று மோடி விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார்.இது இந்திய நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியது. காஷ்மீர்விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது என்ற இந்தியாவின் நீண்டநாள் நிலைபாட்டை, மோடிகாவு கொடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “காஷ்மீர்விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு,அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரதமர்மோடி கோரிக்கை எதுவும் வைக்கவில்லை” என்று  ஒரேயடியாக மறுத்தார்.எனினும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை.போதாக் குறைக்கு, “காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு மோடிஉதவி கேட்டது உண்மைதான்” என்றும்,“டிரம்ப் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்” என்றும் டிரம்ப்பின் ஆலோசகர்லாரி குட்லோவ் கூடுதலாக பற்ற வைத்தார்.இந்நிலையில்தான், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித், மும்பையில் தன்னுடைய, “Visible Muslim, Invisible Citizen: Understanding Islam in Indian Democracy” என்ற புத்தகஅறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.அப்போது, பிரதமர் மோடி - டிரம்ப் உரையாடலைச் சுட்டிக்காட்டிப் பேசிய குர்ஷித்,  “இவ்விஷயத்தில் நான் என்ன கருதுகிறேன் என்றால், ‘டிரம்ப்பைச் சந்தித்தபோது, ‘நீங்கள் ஏன் மெடிடேட் (meditate) செய்யக்கூடாது’ என்று நம் பிரதமர் கேட்க விரும்பியிருக்கலாம், ட்ரம்ப் அதனை ‘மீடியேட்’ (mediate) என்று காதில் வாங்கியிருக்கலாம்” என்றுகிண்டலாக குறிப்பிட்டுள்hர்.மேலும், ‘இது தொடர்புப்படுத்துவதில் உள்ள சிக்கல்தான்’ என்று குறிப்பிட்டுள்ளகுர்ஷித், “ஆனால் ராஜிய உறவுகளில் தொடர்புப்படுத்தல் மிக முக்கியமானது. உங்களால் நீங்கள் நினைத்ததை சரியாக தொடர்புப்படுத்த முடியவில்லை எனில் உங்களிடம் என்ன மாதிரியான ராஜதந்திரம் உள்ளது?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.“வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஒரு செயலராக பிரமாதமான பின்னணிகொண்டவர், நம்மிடம் ஒரு பிரகாசமானவெளியுறவு அமைச்சர் இருக்கிறார். ஆனால் அவருக்காக வருத்தப்படவே முடியும்” என்றும் குர்ஷித் தெரிவித்துள்ளார்.தனது புத்தகம் குறித்தும் நீண்ட உரையாடலை குர்ஷித் வழங்கியுள்ளார்.

“பொதுச்சொல்லாடல் களத்திலிருந்து முஸ்லிம்கள் மெல்ல மறைந்து வருகின்றனர், இது பற்றி ஏன் இப்படி ஆனதுஎன்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. ஆனால்அதற்காக முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி, அந்த தேவையை நிறைவேற்றாது. சுதந்திரவாத கட்சிகளில் முஸ்லிம்கள் புகலிடம் தேடலாம், ஆனால் சுதந்திரவாத கட்சிகள் முதலில் தாங்கள் சுதந்திரவாதிகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். மத மற்றும் அரசியல் துறையில் பணியாற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் இஸ்லாம் பற்றிய நவீன விளக்கங்களை வழங்க வேண்டும், கடந்த காலத்தில் கவிஞர் அல்லமா இக்பால் இதனை செய்து காட்டினார். இஸ்லாம் மதம் நெகிழ்வுத்தன்மை கொண்டது. அதனைப் பின்பற்றுபவர்கள் மனம் தூய்மையாக இருந்தால் நோக் கங்கள் தூய்மையாக இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம். முஸ்லிம்அல்லாதவர்களின் ஆதரவு பெரும்பாலும்முஸ்லிம்களுக்கு உள்ளது. பெரும் பான்மையான இந்துக்களுக்கும், முஸ் லிம்களுக்கும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று விரிவாக குர்ஷித் பேசியுள்ளார்.