tamilnadu

மும்பை ஜிஎஸ்டி வரித்துறை அலுவலகத்தில் தீவிபத்து

மும்பையில் 8மாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. வரித்துறை அலுவலகம் கட்டிடத்தில் 8 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் பரவிய கரும்புகை மூட்டம் நிலவுகிறது. தீ விபத்தில் ஏற்பட்டுள்ள கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.