tamilnadu

img

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சட்டாரா பகுதியில் இன்று காலை 7.48 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.