மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே தனக்கு குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மூன்று மணி நேரத்துக்குள்ளாக கொரோனா வைரஸ் இருப்பதை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் அடங்கிய கிட், இதுவரை ஜெர்மனியில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் மைலேப் டிஸ்கவரி ’Mylab Discovery’ என்ற நிறுவனம் ஈடுபட்டது. அந்நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவர் மினல் தகாவே போஸ்லே. இவர் தன் எட்டுமாதக் குழந்தையை கருவில் வைத்திருந்த கர்ப்பிணி. அந்த நிலையில் கொரோனா வைரஸ் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் ஆறு வார காலத்தில் கொரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கி முடித்துள்ளனர் மினல் தகாவே போஸ்லே தலைமையிலான குழுவினர். பிரசவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் கூட இவர் ஆய்வு பணியில் ஈடுபட்ட மினல் கொரோனா தொற்று இருப்பதை கண்டு பிடிப்பதற்கானகிட்டை கண்டறிந்துள்ளர்.
இதுகுறித்து மினல் தகாவே போஸ்லே பிடிஐ செய்தி நிறுனத்திடம் தொலைபேசி வழியாக பேசுகையில், ”எனது உடல் நலனைவிடவும் நாட்டின் நலனே முக்கியம் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிந்ததும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டோம். நான் இரு குழந்தைகளை பெற்றிருக்கிறேன்” என்று தெரிவி
3 மணி நேரத்தில் கொரோனா தொற்றை கண்டறியலாம்
மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே தனக்கு குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மூன்று மணி நேரத்துக்குள்ளாக கொரோனா வைரஸ் இருப்பதை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளார்..
இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் அடங்கிய கிட், இதுவரை ஜெர்மனியில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் மைலேப் டிஸ்கவரி ’Mylab Discovery’ என்ற நிறுவனம் ஈடுபட்டது. அந்நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவர் மினல் தகாவே போஸ்லே. இவர் தன் எட்டுமாதக் குழந்தையை கருவில் வைத்திருந்த கர்ப்பிணி. அந்த நிலையில் கொரோனா வைரஸ் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் ஆறு வார காலத்தில் கொரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கி முடித்துள்ளனர் மினல் தகாவே போஸ்லே தலைமையிலான குழுவினர். பிரசவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் கூட இவர் ஆய்வு பணியில் ஈடுபட்ட மினல் கொரோனா தொற்று இருப்பதை கண்டு பிடிப்பதற்கானகிட்டை கண்டறிந்துள்ளர்.
இதுகுறித்து மினல் தகாவே போஸ்லே பிடிஐ செய்தி நிறுனத்திடம் தொலைபேசி வழியாக பேசுகையில், ”எனது உடல் நலனைவிடவும் நாட்டின் நலனே முக்கியம் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிந்ததும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டோம். நான் இரு குழந்தைகளை பெற்றிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.