tamilnadu

img

ஜூலையில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டலாம் - மிக்சிகன் பல்கலை எச்சரிக்கை

இந்தியாவில் வரும் ஜூலையில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகலாம் என்று மிக்சிகன் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி,  1,45,380 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60,490 பேர் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
தற்போது மும்பையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படத் துவங்கி உள்ளது. 
தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க  முயன்று தாமதமானதாலேயே தனது தாத்தா உயிரிழக்க நேரிட்டது என மும்பையைச் சேர்ந்த பரீக் என்பவர் குறிப்பிட்டுள்ளார். 
மக்கள்தொகையில் இரண்டாவது நாடான இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 13 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளது. வரும் ஜூலையில் 6லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து 20 லட்சத்து 10 ஆயிரம் பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.  மிக்சிகன் பல்கலைக்கழக கணிப்பின் படி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்தியா கடும் அவதிக்குள்ளாகும். 
மத்திய அரசின் தகவல்படி இந்திய  மருத்துவமனைகளில் 714000 படுக்கைகளே இருக்கின்றன. மக்கள் தொகையுடன் குறிப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என மிக்சிகன் பல்கலைக்கழக பேராசியர் பார்மர் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.