சீர்காழி, ஆக.2- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெட்டாத்தாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் கூலித்தொழிலாளி ராஜசேகர்(28). இவ ருக்கும் சினேகா (22) என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனம் உடைந்த சினேகா வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக் கண்ட ராஜசேகர் தீயை அணைக்க முற்பட்டபோது இவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த தீயால் அவர்க ளின் குடிசை வீடு எரிந்து சாம்பலானது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்த னர். இந்நிலையில் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.