திருவண்ணாமலை, ஜூலை 24- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் வனத்துறையின ரின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வெள்ளியன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களில், வனத்துறையினர் பயிர் செய்வது, மிரட்டி பணம் பறிப்பது, பெண்களை இழிவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும், வனத் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், வன உரிமைச் சட்டம் 2006இன் படி, மலைவாழ் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் பி.செல் வன், மலை சங்க மாவட்டத் தலைவர் பி.பொன்னுசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, நடராஜன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.