வேலூர், நவ. 12- வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த பிரசித்திபெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் உள்ளது. அதன் அருகே தேவராஜ் என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனுசு(19)என்பவர் அடிக்கடி வந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் தராமல் மிரட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அதே கடைக்கு வந்த தனுசும் அவனது கூட்டாளி கள் ஐந்து பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவா ராஜை சரமாறியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க வந்த யுவராஜ், சக்தி வேல், கோபால் ஆகிய மூன்று பேரையும் தாக்கியுள்ளனர். இதில் யுவராஜ் என்பவர் மிக வும் கவலைகிடமான நிலையில் வேலுர் மருத்துவக் கல்லுரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, கத்தியால் குத்திய நபர்களை கைது செய்ய வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் சென்னை-பெங்க ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.